சனி, 26 ஜூன், 2010

படித்ததில் பிடித்த கவிதை

நம்பிக்கையை விதைத்து
வீணாய் போகும் நொடிகளுக்கு
விடை கொடுத்துக் கொண்டிருக்கிறேன்
எனக்கும் ஒரு நாள்
விளங்கும் இந்த உலகமென்று...

விட்டுக் கொடுப்பதை
வாடிக்கையாக்கி கொண்டதால்
வந்தவர் எல்லாம்
வாங்கி மட்டும் சென்றனர்
என் பலவீனத்தை.....

பொறாமை படத் தெரியாததாலோ
என்னவோ வெறுமையாய்
இயங்கிறது இதயம்....

திட்டமிடல் இல்லாததாலோ ஏனோ
திடமேயில்லை எனக்கு
நம்பி மட்டுமே
நாசமாகி கொண்டிருக்கு
என் நம்பிக்கை

அடுத்தவருக்கு ஆறுதல்
சொல்லும் மனசுக்கு
அணைத்துக் கொள்ள கரங்கள்
இல்லாத ஏக்கம்

புலம்பிக் கொண்டே இருப்பதால்
புலப்படவில்லை நிஜங்கள்
சமத்துவம் சொல்லும் என்
கண்ணுக்கு மட்டும்
தென்படவில்லை வானவில்

அறியாமை விதைத்து
அறுவடை செய்யாதது
என் குற்றமே...நான் தெளிந்த
நீரோடையாய் வேண்டாம்
மனதை அறிந்து கொள்ளும்
ஆற்றலை மட்டும் கொடு மனமே....

1 கருத்து:

  1. பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
    உங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
    www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
    எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!

    பதிலளிநீக்கு