செவ்வாய், 22 செப்டம்பர், 2009

பாரதியார் கவிதை

தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ? நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவைநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

வியாழன், 30 ஏப்ரல், 2009

படித்ததில் பிடித்தது

1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.
2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்தச் சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக அமருங்கள்.
3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.
4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
5. நிறைய விளையாடுங்கள்; நன்றாக விளையாடுங்கள்.
6. கடந்த ஆண்டில் படித்ததை விட இன்னும் அதிகமான புத்தகங்களை இந்த ஆண்டு படியுங்கள்.
7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் இயந்திரத்தனமான வாழ்க்கைக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.
8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.
9. நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!
10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை நிறைய உண்ணுங்கள். ஆனால், இவை மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களைக் குறைவாக உண்ணுங்கள்.
11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.
12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
13. உங்களுடைய உன்னதமான ஆற்றலைத் தேவையற்ற வம்புகளில் இழக்காதீர்கள்.
14. உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவற்றைப் பற்றி யோசிக்காதீர்கள்.15. எதிர்மறையான எண்ணங்களைக் கைவிட்டு, ஆக்கபூர்வமான நிகழ்காலத்தில் வாழுங்கள்.
16. 'வாழ்க்கை என்ற பள்ளிக்கூடத்தில் நாம் அனைவரும் மாணவர்கள். பிரச்சினைகள் என்பது நம்முடைய பாடத்தின் ஒரு பகுதி. அல்ஜீப்ரா வகுப்பு போல அது மாறிவிடும். ஆனால் நம்முடைய படிப்பனுபவம் வாழ்வின் இறுதி வரை வரும்' என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.
18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.
19. உலகில் வாழப்போகும் குறுகிய கால வாழ்க்கையில் எவரையும் வெறுக்காமல், எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழுங்கள்.
20. வாழ்க்கையைச் சிக்கலான நிலையாகக் கொள்ளாதீர்கள். 'ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.
21. எல்லா விவாதங்களிலும் நீங்கள்தான் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணாதீர்கள். முரண்பாடுகளையும் மௌனமாய் ஏற்றுக் கொள்ளுங்கள்.
22. கடந்தகால வாழ்க்கையுடன் சமாதானமாகப் போய் விடுங்கள். இதனால் நிகழ்கால வாழ்க்கை அமைதியாக இருக்கும்.
23. மற்றவர்களின் வாழ்க்கை நிலையை, உங்களுடனோ அல்லது உங்கள் வாழ்க்கைத் துணையுடனோ ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அவர்களுடைய வாழ்க்கைப் பயணம் பற்றி நமக்கு எதுவும் தெரியாது.
24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பு என்பதை உணருங்கள்.
25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.
26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பது உங்கள் வேலை இல்லை என்று உணருங்கள்.
27. கடவுள் அனைத்தையும் ஆற்றுபவன் என்று மனதார உணருங்கள்.
28. நல்லதோ கெடுதலோ, எல்லாமே கடந்து போய்விடும் என்று நம்புங்கள்.
29. உங்களுடைய துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர்கள் உங்கள் நண்பர்கள். எனவே அவர்களோடு நிரந்தரமாகத் தொடர்பு வைத்திருங்கள்.
30. பயனில்லாத, அழகில்லாத, மகிழ்ச்சியளிக்காதவைகளில் இருந்து வெளியே வந்து விடுங்கள்.
31. உங்கள் தகுதிக்குத் தேவையான அனைத்தும் உங்களிடம் இருப்பதால் பிறரைப் பார்த்து பொறாமைப்படுவதைத் தவிர்த்து விடுங்கள்.
32. வாழ்வின் 'உன்னதம்' என்பது இன்னும் வரவில்லை. நிச்சயம் வந்து விடும் என்று நம்புங்கள்.
33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.
34. எல்லோராலும் அங்கீகரிக்கப்படும் செயல்களையே செய்யுங்கள்.
35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.
36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.
37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு செயலைச் செய்யுங்கள்.
38. உங்களுடைய வரம்பை அறிந்து எந்தச் செயலையும் செய்யுங்கள். அளவுக்கு மீறினால் அம்சமும் இம்சைதான்!
39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் உயிருடன் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!
40. யார் மீது நீங்கள் அதிக அக்கறையுடன் இருக்கிறீர்களோ, அவர்களைப் படிக்கச் செய்து இவற்றைப் பரப்புங்கள்!